Popular Posts

Popular Posts

Saturday, November 13, 2010

Humming Bird

என்னவளே .....என்னுயிரே...
என் காவிய நாயகியே
உன் விழிகள் பேசிய மொழியினில் - நான்
இதயம் மகிழ்ந்து.. பதில் மறந்து
என் தேகம் மறந்தனே ....
என் உறவே உயிரில் கலந்த என் உறவே
உன் முகம் தான் எனக்கு
ஆதவன் என்றும் - அருகில்  நீயில்லாத
போழுதென்றும் - எனக்கு
இருளில் தான் கிழக்கு ....
அன்பே என் அன்பே அன்பே  .....
என் கண்கள்  ரெண்டும் ...
துயில மறக்குது...அது
உன் நினைவுகளை தேடி அலைந்து
என் சுவாசம் முடக்குகிறது ...
என் கண்ணே ...மணியே கண்ணின் விழியே ....
கண்ணில் புகுந்து  இதயம் மலர்ந்த
என் தேவி நீ அல்லவா
உயிரில் கலந்து உதிரம் சிலிர்த்த
உறவில் வென்ற  மாட புறா வல்லவா ....
உன்னோடு பேசும் வேளையில்
என்ன மறந்தேன்...
உன்னையே நினைத்து என்
உறக்கத்தை மறந்தேன் ....
உன் உறவால் வந்த வசந்தத்தால்
என் சோகங்களையும் மறந்தேன்...
எதனை துறந்தாலும்
உன்னால் உண்டான இந்த
புனித பந்தத்தை எத்தனை
துயர்களிலும் துறக்கலாகுமோ
துறந்த பின் தெருவில் போவேனோ ..???
என்றும் இனிக்கும்  நமது இளமை
இனிய வசந்த நினைவுகளாயவை
கனவுகளாய் அவை காலமெல்லாம் 
எனக்கு மட்டும் சொந்தம் நீ விட்டு சென்ற எச்சம்
அது தித்திக்கும் என்றும் என்றும் .........

கவிமாமணி  சாமுவேல் ராபின்சன் 

No comments: